பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவி.. நண்பர்கள் பாலியல் தொல்லை செய்த கொடூரம்..!
student sexual harassment
பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லை அதிகரித்து கொண்டு வருகிறது. பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில் கோவை மாவட்டத்தில் கீழ நாயக்கன் பாளையத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25 ஆம் தேதி அன்று ஐஸ்வர்யா நகரில் சக நண்பர்களுடன் பூங்காவில் அந்த மாணவி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றார். பிறந்தநாள் கொண்டாடி விட்டு செல்ல இரவு நேரமானதால் மணிகண்டன் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை மற்றொருவன் வீடியோ எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ராகுல் பிரகாஷ் நாராயணமூர்த்தி கார்த்திகேயன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தார் மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
English Summary
student sexual harassment