மதுவை கொடுத்து மாதுவை சீரழித்த கொடூரம்! இளைஞர்களின் வெறிச்செயல்!!
student raped by giving alcohol
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு என்னும் பகுதியை சேர்ந்தவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். இதன் காரணமாக இருவரும் தினமும் சந்தித்து பேசி கொண்டு வந்துள்ளனர்.
அந்த வகையில் இருவரும் நேற்று முன்தினம் அருகில் இருந்த பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவன் வசிக்கும் பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் மஞ்சுநாத் என்பவர்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
அந்த மாணவன் தெரிந்தவர்கள் தானே என்று அவர்களை பார்த்து அதிர்ச்சி அடையாமல் நின்று பேசிக்கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த இரண்டு இளைஞர்களும் அவர்களிடம் மது கலக்கப்பட்ட குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். அதை அறியாத மாணவி குளிர்பானத்தை குடித்துள்ளார்.
உடனே அவர் போதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை தூக்கி சென்ற அந்த 2 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் மயக்கம் தெளிந்த பின் அந்த பெண் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த மாணவன் மீதும், பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர், அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் தலைமறைவான இரண்டு இளைஞர்களையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வந்துள்ளது. இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
English Summary
student raped by giving alcohol