ஹீட்டரில் குளிக்க வெந்நீர் வைத்த போது நேர்ந்த பரிதாபம்.! மின்சாரம் தாக்கி மாணவி பலி.!
Student killed by electrocution in Thirupattur
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஹீட்டரில் குளிக்க வெந்நீர் வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் ரத்னாதேவி(17) பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் புதுச்சேரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதால் ரத்னா தேவி பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரத்னாதேவி நேற்று மாலை குளிப்பதற்கு வெண்ணீர் வைப்பதற்காக குடத்தில் தண்ணீர் பிடித்து ஹீட்டர் போட்டுள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து ரத்னாதேவி குடத்தை தூக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Student killed by electrocution in Thirupattur