நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுகோட்டை மாவட்டம், குணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் இருக்கிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் அவரது மாமா வீட்டில் தங்கி பள்ளி சென்று வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நண்பர்களுடன் தமிழ்ச்செல்வன் அங்கு உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

 அப்போது நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில் இவர் மட்டும் வீடு திரும்பவில்லை நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். அங்குள்ள விவசாய கிணற்றில் சிறுவன் சடலமாக கிடப்பதை இந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வந்த தமிழ்ச்செல்வன் உறவினர்கள் இது அவரது சடலம் தான் என்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student death Near Puthukottai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->