தமிழகத்தில் தொடரும் நீட் தேர்வு மரணங்கள், மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு..!
Student Committed Suicide Near Karur
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கொள்ளுத்தின்னிபட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பீரித்தி கடந்த கடந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு எழுதியுள்ளார். குறைவான கட் ஆப் கிடைத்ததால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் மருத்துவம் தான் படிப்பேன் என கூறி இந்த முறையும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில், அவரது பாட்டி வீட்டில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த அவரது பாட்டி அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலைமீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அவர் நீட்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்துவிடுவோம் என்ற மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
English Summary
Student Committed Suicide Near Karur