கன்னியாகுமரி : கல்விகட்டணம் செலுத்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!
student committed suicide In Kanniyakumari
கல்விகட்டணத்தை செலுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கழுவன்திட்டை ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவருக்கு பென்சி (19) என்ற மகள் இருக்கிறார். பென்சி அங்குள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்வி கட்டணத்தை செலுத்தால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.KA
English Summary
student committed suicide In Kanniyakumari