செல்போனில் கேம் விளையாடிதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


போனில் கேம் விளையாடுவதை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள் இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மகளுக்கும் திருமணம் ஆனதால் அழகம்மா தனது மூன்றாவது மகனான செல்லதுரை உடன் வசித்து வருகிறார்.

அங்குள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். குருடனின் காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றதால் ஒரு ஆண்டுக்கு முன்பு செல்லதுரை செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார் ஆனால் ஆன்லைன் வகுப்புக்கு செல்லாமல் அவர் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் வகுப்பிற்கு செல்லாமல் செல்லதுரை செல்போனில் கேம் விளையாடிய தாக கூறப்படுகிறது. இதனால் அவரின் தாய் அழகம்மாள் செல்போனில் விளையாடாதே படிப்பில் கவனம் செலுத்து என திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்து செல்லதுரை வீட்டில் வைத்திருந்த கண்வலிக்கிழங்கு விதையை சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Committed Suicide Dindugal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->