ஆட்டோ ஓட்டுனரின் மீது கொலை வெறித்தாக்குதலில், ரெளடிகளாக பள்ளி மாணவர்கள்..!! இறுதியில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகில் பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு வேதாசலம் நகரில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். செங்கல்பட்டு அனுமந்தபொத்தேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டனரான திலீப்குமார் என்பவர் பள்ளி அருகே தனது ஆட்டோவை ஓட்டிச் சென்ற சமயத்தில் மாணவர்கள் வந்த வாகனத்தில் மோதியது.

இதனால் திலீப்குமாருக்கும், மாணவர்களுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்தது பின்னர் அதுவே கைகலப்பாக மாறியது. அப்போது திலீப்குமாரை மூன்று பள்ளி மாணவர்களும் சரமாரியாக தாக்கியபின், மாணவன் ஒருவன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பியோட மற்ற இருவரும் தங்களது வாகனத்தில் தப்பித்துவிட்டார்கள்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த திலீப்குமார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து திலீப்குமாரின் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் 3 மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Attack Auto Driver


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->