ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கும் வழக்கு! உச்சநீதிமன்றதில் கடுமையாக வாதாடிய தமிழக அரசு!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. 

இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்'' என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகம் செய்து வந்தது. 

ஆனால் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இதன் பிறகு, ஸ்டெர்லைட் ஆலை செயல்பட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசும், வேதாந்த நிறுவனமும் தங்களின் வாதத்தை முன்வைத்தன. இந்நிலையில், தமிழக அரசு வைக்கப்பட்ட வாதத்தில் "ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது" என  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது 

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது "ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும்,  நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவே ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது, மேலும் ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுவை அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்க கூடாது என தெரிவித்துள்ளது 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷ வாயுவை வெளியேற்றக் கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் மட்டுமே என கூறிய தமிழக அரசு, ஆலையை மூடிய பின் நிலத்தடி நீர் தரம் மேம்பட்டுள்ளதாகவும், காற்று மாசுவும் குறைந்துள்ளதாகவும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என  தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sterlite case in supreme court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->