குடிக்க பணம் தர மறுத்த தாய்.. உலக்கையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்..! - Seithipunal
Seithipunal


தாயை அடித்துக் கொன்ற வளர்ப்பு மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ராசு பட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள். இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாததால் செல்வராஜ் என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சன்னாசி கடந்துவிட்டார்.

சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்த செல்வராஜ் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து வீரம்மாளிடம் பணம் வாங்கி சென்று தேவையற்ற செலவு செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று உங்களிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு வீரம்மாள் மறுக்கவே விரக்தி அடைந்த செல்வராஜ் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அங்கு இருந்த உலக்கையால் பலமாக தாக்கியுள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர். எடுத்து வளர்த்த மகனே தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Step Son kills His Mother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->