கனவில் கூட முதல்வராக முடியாது..! ஓபிஎஸ் சூட்சம பேச்சின் பலே பின்னணி..! - Seithipunal
Seithipunal


மதுரையில் பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாத் தேவரின் 40-வது குருபூஜையையொட்டி இன்று மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து உசிலம்பட்டியில் உள்ள மூக்கையாத் தேவர் நினைவிடத்துக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டாலின் அடுத்த முதல்வராவேன் என கூறி வருகிறார். இதிலிருந்தே அவர் கற்பனை உலகில் மிதக்கிறார் என தெரிகிறது என்றார்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் பெயர் அடிபடுகிறதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம். இப்போது நான் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் திட்டம் இல்லை என ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலைராஜா, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஐ.பி.எஸ். பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin Can't even be the chief minister in the dream


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->