அதிகார மமதையால் நடைபெறும் அராஜகம்.! கொந்தளித்த ஸ்டாலின்.!
stalin angry with admk
சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் சுபஸ்ரீ (23), கனடா செல்வதற்காக தேர்வு எழுத சென்று முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த போது, பேனர் சரிந்து விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளால் சுபஸ்ரீ உயிரிழந்து மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது.
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை சுபஸ்ரீயின் வாழ்கையை காவு வாங்கியுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?." என கூறியுள்ளார்.