தப்பியோட முயன்ற கைதி.. திருவில்லிபுத்தூரில் பதறிப்போன மக்கள்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி சமத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் பிரபு (வயது 20). இவர் சாதி பெயரை கூறி திட்டியதாக வழங்கப்பட்ட புகாரில் நரிக்குடி காவல் துறையினர் கைது செய்து, திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த பின்னர், சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திருவில்லிபுத்தூர் கிளைச்சிறை அருகே வந்த நேரத்தில், பிரபு தப்பி ஓடியுள்ளார். இதன்பின்னர், காவல் துறையினர் பிரபுவை 2 கி.மீ தூரம் துரத்தி சென்று பொதுமக்களின் உதவியுடன் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து பிரபுவிடம் தப்பித்து செல்ல என்ன காரணம் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதிகாலை நேரத்திலேயே காவல் துறையினரின் மத்தியில் பெரும் பீதியை இது ஏற்படுத்தியது. மேலும், 3 காவல் அதிகாரிகளுக்கு டேக்கா கொடுத்து கைதி தப்பியோட முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivilliputhur culprit try to escape


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->