மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோக சம்பவம்., வேதனையில் மீனவர்கள்!!
srilanka navy attack tamil fishermans
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் என இரு மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன இந்த துறைமுகங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு துறைமுகங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து 160 விசைப்படகுகளில் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற கார்த்திக், குட்டியாண்டி, ராசு, மனோகர், ஆனந்த் ஆகிய 5 பேர் ஒரு படகில் நேற்று நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை கொண்டு மீனவர்களின் படகு மீது மோதி மீனவர்களின் மோதியுள்ளனர்
இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை கொண்டு தாக்கியதில் மீனவர்களின் படகின் முகப்பு பலத்த சேதம் அடைந்ததுள்ளது. மேலும் மரச்சட்டத்தை வைத்து மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். மீன்களைப் பிடிக்கச் சென்றவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஜெகதாப்பட்டினம் வந்து சேர்ந்தனர்.
மீனவர்களை மீட்ட தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளும், இந்திய கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களை மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து சில நாட்களில், நடந்த இந்தத் தாக்குதல் தங்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
English Summary
srilanka navy attack tamil fishermans