எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் தனபால் புகழாரம்! பாராட்டுகளை பெற்ற திமுக எம்.எல்.ஏ மஸ்தான்!
Speaker dhanabal last speech in 15th assembly
தமிழகத்தின் 15ஆவது சட்டப்பேரவையின் கூட்டம் ஆனது இன்றோடு நிறைவடைந்தது. தற்போதைய ஆளும் அதிமுக தலைமையிலான அரசின் இறுதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று, சட்டபேரவை தலைவர் சபாநாயகர் தனபால் சிறப்பு உரையாற்றினார். அதில் சட்டப்பேரவை வரலாற்றிலேயே விடுமுறை எடுக்காமல் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களும் வருகை புரிந்த முதல்வர் பழனிசாமி என புகழாரம் சூட்டினார்.
முதல்வரை பாராட்டும் முன், முன்னதாக சில முக்கிய பட்டியல்களையும் வெளியிட்டார் சபாநாயகர் தனபால். அதில், 15ஆவது சட்டப்பேரவையில் அதிக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ.க்களில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு முதலிடத்திலும், செஞ்சி தொகுதியின் திமுக எம்எல்ஏ மஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
அதேப் போல், அதிகபட்சமாக அமைச்சர் தங்கமணி 102 வினாக்களுக்கு பதிலளித்து முதலிடத்திலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 97 வினாக்களுக்கு பதிலளித்து இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார். மூன்றாவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 79 வினாக்களுக்கு பதிலளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் முதல்வர் எடப்பாடி , துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
English Summary
Speaker dhanabal last speech in 15th assembly