சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு.!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி.!!
sp velumani new announcement to chennai peoples
அமைச்சர் எஸ்பி வேலுமணி, சென்னை எம்ஆர்சி நகரில் அமைந்துள்ள தனியார் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னையில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழைநீர் சேமிப்பை கடைப்பிடிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளிலும் தனியார் கட்டிடங்கள் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் தண்ணீர் அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜ லிங்கம், "அதிக விலையை தண்ணீர் விற்ப்பதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது" என தெரிவித்துள்ளார்.
English Summary
sp velumani new announcement to chennai peoples