தீபஒளித் திருநாள் இரயில் டிக்கெட் புக்கிங் மந்தம்.. ஈயாடிய முன்பதிவு மையங்கள்.!
Southern Railway Deepawali Special Train Booking Low due to Corona Fear Says by Trichy Railway Limit Officer
தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபஒளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை தங்களது குடும்பத்துடன் கொண்டாட வெளியூரில் பணியாற்றி வரும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று. தமிழகத்தில் தீபஒளித் திருநாளுக்காக இரயில் முன்பதிவு தொடங்கும் சில மணிநேரத்தில் அனைத்து பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு தீர்ந்துவிடும்.
இந்த வருடத்தின் தீபஒளித் திருநாளை முன்னிட்டு தென்னக இரயில்வே சார்பாக சிறப்பு முன்பதிவு மையங்கள் மற்றும் இணையவழி முன்பதிவு மையங்கள் ஆகியவை கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தீபஒளித் திருநாள் பயணச்சீட்டு முன்பதிவுக்கு மக்கள் வரவேற்பு தெரிவிக்கவில்லை. இதனால் சிறப்பு இரயில்கள் பெரும்பாலும் இயக்கப்படாது என தெரியவருகிறது.
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் இரயில்கள், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் இரயில்கள் மற்றும் சிறப்பு இரயில்களும் முன்பதிவு விஷயங்களில் மந்த நிலையை சந்தித்துள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே முன்பதிவாகியுள்ளது. இதனால் சிறப்பு இரயில்கள் இயக்கம் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே உயரதிகாரி தெரிவிக்கையில், " தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல விரும்புவதில்லை. இதனால் இரயில் பயணச்சீட்டு முன்பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு நிறைய நாட்கள் இருப்பதால் இறுதி நேரத்தில் பயணச்சீட்டு விற்பனையாகி தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து கூடுதல் இரயில்கள் இயக்கப்படும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Southern Railway Deepawali Special Train Booking Low due to Corona Fear Says by Trichy Railway Limit Officer