சென்னை - திருப்பதி, மதுரை - விழுப்புரம் இரயில்கள் இயக்கம் - தென்னக இரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த இரயில்கள் சேவை படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. இதில், வெளி மாநிலங்களுக்கு செல்லும் இரயில்கள் இயக்கத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில், அது தொடர்பான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.

இன்று தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சென்னை - திருப்பதி இடையே சிறப்பு இரயில் இயக்கப்படும். சென்னையில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு சென்றடையும். சென்னை - ஜோலார்பேட்டை இடையே இருமார்கத்திலும் தினசரி சிறப்பு இரயில் இயக்கப்படும். மதுரை - விழுப்புரம் விரைவு வண்டி இருமார்கத்திலும் இயக்கப்படும்.

மேற்கூறிய இரயில்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும். இந்த இரயிகளுக்கான முன்பதிவு 28 ஆம் தேதி காலை 8.30 மணிமுதல் துவங்கும் " என தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway Announce Chennai to Tirupati and Viluppuram to Madurai Train Services


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->