மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்காததால் மகன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்காததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(30). இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த விஜய் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார், உயிரிழந்த விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son suicide in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->