பெற்றோர் கொடூர கொலை.. திருமணம் செய்து வைக்காததால் மகன் வெறிச்செயல்..!
Son Kills His parents
திருமணம் செய்து வைக்கவில்லை என தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே உள்ள நாட்டியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (60). இவருக்கு வள்ளி என்ற மனைவியும் கீதா என்ற மகளும் பாலு, கோபிநாத் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் மூன்றாவது மகன் கோபிநாத்துடன் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் சொந்த ஊரில் இருந்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி பல முறை பெற்றோரிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் திருமணம் செய்து வைக்க கோரி தகராற்றில் ஈடுப்பட்டார்.
ஓரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆந்திரமடைந்த அவர் தாய் தந்தையாய் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களது மகன் அங்கு ஒன்றும் ஆறியாமல் இருந்தததை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டானர். அப்போது அவரிடம் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அவர் தாய் தந்தையை கொலை செய்ததை ஒப்புகொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.