டிவியில் ஃபுல் சவுண்ட்.. கதறி.,துடிக்க.. மதுபோதையில் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வசித்துவரும் சிவராஜ் என்பவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து மனைவிகளுடன் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து சென்றனர். தற்போது மூன்றாவது மனைவியுடன் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடனும், குழந்தையுடனும் தகராறு செய்வது வழக்கம். இது போல இரண்டு நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து சிவராஜ் அவருடைய வீட்டிலேயே மது அருந்தி இருக்கின்றார்.

அப்பொழுது சிவராஜின் தந்தை அவரை கண்டித்துள்ளார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த சிவராஜ் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரின் தலையில் ஓங்கி அடிக்க, வலி தாங்காமல் கதறி, துடித்து சிவராஜன் தந்தை கத்தியுள்ளார். அதனால், சத்தம் வெளியே கேட்க கூடாது என தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகப்படுத்தி வைத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவராஜியின் தந்தை உயிரிழக்க, அவரை எரிக்க முயற்சி செய்த பொழுது டிவியின் சத்தம் அதிகமாக இருக்கிறது என அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வர, மழுப்பலான பதிலை அளித்து விட்டு டிவி சத்தத்தை குறைக்காமல் சிவராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதன் காரணமாக டிவியின் சத்தம் அதிகமாக கேட்டதை தொடர்ந்து விடிந்த பின்னர் சிவராஜன் வீட்டிற்கு அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்க அங்கே சடலம் கிடந்துள்ளது. 

இதன் காரணமாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேடுதல் வேட்டைக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த சிவராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

son killed father in covai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->