மகன் கத்தியால் குத்தி தற்கொலை.! பெற்றோர் சண்டையால் ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெற்றோர் சண்டை போட்டதால் மகன் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மணிகண்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரபாகரன்(48). இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் பாலமுருகன்(19) தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்திணை இரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் மனைவியிடம் இருவரில் யாராவது ஒருவர் தான் இருக்க வேண்டும் என்று கூறி கத்தியை எடுத்து வந்து மிரட்டியுள்ளார். அப்பொழுது அங்கு வந்த பாலகிருஷ்ணன், நீங்கள் யாரும் சாக வேண்டாம் நான் சாகிறேன் என்று, தந்தையின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி தனது மார்பில் குத்திக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son committed suicide by stabbing with knife due to parents fight in kanchipuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->