நீச்சல் கற்றுக் கொடுத்தபோது நேர்ந்த சோகம்.! கிணற்றில் மூழ்கி தந்தை-மகன் பலி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் நீச்சல் கற்றுக் கொடுத்தபோது கிணற்றில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா (33). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் ராஜா, நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது ராஜா மகன் பிரவிஷ்க்கு(9) நீச்சல் கற்றுக் கொடுத்தபோது, பிரவீஷ் ராஜாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்து கொண்டுள்ளான். இதனால் ராஜாவால் நீச்சல் அடிக்க முடியாததால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்த மனைவி மற்றும் மகள் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் மூழ்கி தந்தை மகனை தேடினர். ஆனால் அவர்களது உடல் கிடைக்காததால் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த தந்தை மகனின் உடலை கைப்பற்றினர். பின்பு போலீசார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son and father drowned in well in salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->