ஆசை மகன் இறப்பு.. கதறி அழுத தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..!
son and father dead in puthukottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அரையப்பட்டி பகுதியில் மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி என்ற பகுதியை சேர்ந்த 75 வயதான முதியவரான ஆறுமுகம் தன்னுடைய மகன் ராஜாங்கத்தின் மீது அதிக அளவில் பாசத்தினை வைத்துள்ளார். 46 வயது ராஜாங்கத்துக்கு திருமணமாகி 5 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
ராஜாங்கம் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த வயிற்று வலியால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார் நேற்று மிகவும் வயிற்றுவலி காரணமாக ராஜாங்கம் துடிக்க அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.
இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி ராஜாங்கம் உயிரிழந்துள்ளார். எனவே, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். ராஜாங்கம் உயிரிழந்த செய்தியை அறிந்த ஆறுமுகம், கதறி அழுதுள்ளார். பின்னர், துக்கம் தங்க முடியாத அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மகனின் உடல் மீதே விழுந்து உயிரை விட்டுள்ளார்.
மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
son and father dead in puthukottai