தமிழக முதல்வரிடம் கண்ணீர் கோரிக்கை வைத்த சிறுவன்...!
Social Media Trending Video about Child Cried and Request to TN CM
சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு நிரந்தர பணி வழங்கக்கோரி தமிழக முதல்வரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ள வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த வீடியோ காட்சியில், " எனது பெயர் சிபிச்செல்வன். எனது தந்தையின் பெயர் தனகோபால். எனது தந்தை வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பள்ளிக்கு வேலைக்கு செல்கிறார். அதனால் தங்களின் மாத வருமானம் குறைந்த அளவே உள்ளது.
வீட்டிற்கு தேவையானது அல்லது எங்களின் படிப்பு போன்றவற்றுக்கு ஏதாவது வாங்க வேண்டுமென்றால், அதற்கும் காசு இல்லை. நான் ஏழாவது பயின்று வருகிறேன். எனது சகோதரி கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார்.
போதிய வசதி இல்லாததால், எங்களின் வாழ்க்கை மிகுந்த துயரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதனால், பகுதிநேரமாக பணியாற்றிவரும் தந்தைக்கு, பணிநிரந்தரம் செய்து வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் " என சிறுவன் கண்ணீர் விட்டு அழுது கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் வருடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை ஆகிய பல துறைகளில் பகுதி நேர ஆசிரியர்களாக 16 ஆயிரத்து 500 பேரை நியமனம் செய்திருந்தார். இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பணி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாத சம்பளம் மாதம் ரூபாய் 5000 வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014 ஆம் வருடத்தில் மாத ஊதியமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்ட்ட நிலையில், இந்த பிப்ரவரி 2021 முதல் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு வந்துவிட்டாலும், குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Social Media Trending Video about Child Cried and Request to TN CM