தமிழகத்தில் பாம்பு கறி! வெளியான அதிர்ச்சி வீடியோ!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஒரு கோவிலில் பாம்பை வெட்டி சில இளைஞர்கள் சமையல் செய்து சாப்பிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டணம், வடபத்திர காளியம்மன் கோவிலில் ஒரு சில இளைஞர்கள் பாம்பை வெட்டி, அதனை சமைத்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கமாபுரி பட்டணம், வடபத்திர காளியம்மன் கோவிலின் பின் பகுதியில், ஒரு சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பகுதியில் இருந்த பாம்பு ஒன்றை பிடித்து,

அதன் தோலை உரித்து, அதை துண்டு துண்டாக வெட்டி, பின் அதனை சமைத்து உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியது.

சீனா போன்ற நாடுகளில் பாம்பு கறி தின்பது மிகவும் சாதாரணமாக இருந்து வந்த நிலையில், இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பாம்புக் கறி உண்ணும் வீடியோ காட்சியை பார்த்து தமிழர்கள் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake meat in salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->