பாம்போடு மருத்துவமனைக்கு சென்ற நபர்.! பின்னர், நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி.!
snack in ramanadhapuram hospital
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது வீட்டிற்கு அருகே சம்பவத்தன்று கட்டுவீரியன் பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட சேது பாம்பினை விரட்ட முயற்சித்த சமயத்தில், பாம்பு அங்கிருந்து செல்ல மறுப்பு தெரிவித்து அங்கேயே இருந்துள்ளது. பொறுத்து பார்த்த சேது பாம்பினை கைகளில் எடுக்க முயற்சித்துள்ளார்.
இந்த நேரத்தில், பாம்பு சேதுவின் கைகளில் சுற்றிக்கொண்டு கண்டித்துள்ளது. பாம்பு கடித்ததும் வலியால் துடித்த சேதுவை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி பாம்பை கொன்றனர்.
பின்னர் அங்குள்ள தொண்டி மருத்துவமனையில் சேதுவிற்கு முதலுதவி செய்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தன் கையை கடித்த பாம்புடன் சேது வந்துள்ளார்.
சேதுவிடம் மருத்துவர்கள் என்ன பாம்பு கடித்தது என்ற கேள்வியை முன்வைக்கவே, 3 அடி நீளமுள்ள பாம்பை எடுத்து சேது காண்பித்துள்ளார். இதனை கண்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பதறியோடவே, அதை அப்போது கொன்றாச்சு என்ற குரல் வந்ததும் அனைவரும் நிம்மதியடைந்துள்ளனர். பின்னர் சேதுவிடம் பாம்பின் பெயர் தெரிந்தாலே போதும், அதை கையில் எடுத்து வர வேண்டாம் என்று கூறி அறிவுறுத்தினர்.
English Summary
snack in ramanadhapuram hospital