100 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அரங்கேறிய சோகம்..! ஏமாந்த சிறுமி.!
small girl pregnant in trichy
திருச்சி அருகே 17 வயது சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது சிறுமி தன்னுடன் 2018ல் 11ஆம் வகுப்பு படித்த மாணவன் தான் தான் அதற்கு காரணம் என்று கூறியுள்ளார். செல்போன் எண்ணை வாங்கி காவல்துறையினர் போன் செய்தபோது ரீச் ஆகவில்லை. பின்னர் அந்த மாணவியை பள்ளியில் படித்த நபரின் லிஸ்ட் எடுத்து பார்த்தபோது அதில் அவனது பெயரே இல்லை.
மாணவியிடம் விசாரித்த பொழுது தனது காதலனை காப்பாற்ற தான் அப்படி கூறியது கூறியதாக தெரிவித்துள்ளார். தனது கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடன் ஒன்பதாம் வகுப்பு படித்த யுவராஜ் தான் என்றும், இருவரும் காதலிப்பதாகவும் யுவராஜ் 100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்ததாகவும், அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் அதனால் தான் கற்பமானதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி கூறிய யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
small girl pregnant in trichy