சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி..!
Sivasankar Baba's bail plea dismissed
சிவசங்கர் பாபா மீதான ஜாமின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு உத்தரவு..!
சென்னை ‘சுஷில் ஹரி’ பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக சிவசங்கர் பாபா மீது புகார் வெளிவந்ததை அடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் வாழ்கிற மாணவிகள் சிலரும் அவர்மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
தற்போது புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அன்லைனில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கை மீண்டும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
அத்துடன் 27 ஆம் தேதி வரை அவர் சிறையிலிருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வரும் 21 ஆம் தேதிக்குப் பின்னரே பாபாவின் விடுதலை குறித்த தகவல் தெரியவரும்.
English Summary
Sivasankar Baba's bail plea dismissed