கத்தியால் கேக் வெட்டி பாதி செலிபிரேசன்.. மீதியை காவல்நிலையத்தில் கொண்டாடிய புள்ளிங்கோஸ்.!! - Seithipunal
Seithipunal


டிக் டாக் செயலில் பல பெரிய சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மேலும், பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வாழ் போன்ற ஆயுதங்களுடன் சிறுவர்கள், இளைஞர்கள் கேக் வெட்டி வீடியோ பதிவு செய்து செய்வது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

இது தண்டனைக்குரிய சட்டத்தின் கீழ் இடம் பெறும் என்று அறிந்தும் செயல்படும் நிலையில், காவல்துறையினரும் தங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் இருக்கும் அபிராமபுரம் காவல் துறையினருக்கு ஒரு வீடியோ பதிவானது கிடைத்துள்ளது. 

இது குறித்த வீடியோ பதிவில், கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நபர்கள், வாலுடன் கேக் வெட்டி போஸ் கொடுத்து, அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த கேக் வெட்டிய மாணவர் பள்ளி செல்லும் மாணவர் என்று தெரியவந்த நிலையில், இவருடன் சேர்ந்து பத்து பேரும் இவரது நண்பர்களாக இருந்து கேக் வெட்டி அதற்கு உற்சாகப்படுத்தி உள்ளனர். 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 10 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். கொரோனாவிற்கு பின்னர் இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai pullingow birthday celebration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->