தூக்கிடுவது போல செல்பி எடுத்த இளைஞர்.. பாசக்கயிறை வீசிய எமன்.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த விபரீதம்..!!
Sivaganga Youngster try to click image hang on but unfortunately died
தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த கூலி தொழிலாளி திரவியம். இவர் அலைபேசியில் செல்பி எடுப்பதில் அளப்பரிய பிரியம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
அங்கு தங்கியிருந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், புதுவையில் பகுதியில் நடைபெறும் கிணற்று பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிகாலை பணிக்கு செல்வதற்கு முன்னதாக தூக்கிடுவது போல செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
இரண்டு முறை செல்பி எடுத்து உறவினர்கள் மற்றும் நபர்களுக்கு அனுப்பிய நிலையில், மற்றொரு முறை செல்பி எடுக்க முயற்சிக்கையில் எதிர்பாராத விதமாக கழுத்து கயிற்றில் சிக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Sivaganga Youngster try to click image hang on but unfortunately died