பணியிடத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்.!!
Sivaganga tahsildar suspend by district collector
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகள், குடியிருப்பு இல்லாத புன்செய் பகுதிகள் மற்றும் மனைவாடகை என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனைவாடகை பகுதிகளை அளவீடு செய்து வழங்க, காரைக்குடியில் தனியாக தசிலாதார் அலுவலகம் இருக்கிறது.
இந்த அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மகாதேவன். இவர் அங்கு பணியாற்றி வந்த பெண்களிடம் அத்துமீறி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரியவருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொறுத்து பார்த்த நிலையில், நாளுக்கு நாள் பாலியல் தொல்லை எல்லை மீறி சென்றுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தாவின் தலைமையில் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள கூறினார். இந்த குழு விசாரணையில் பாலியல் தொல்லை உறுதியானதை அடுத்து, தாசில்தாரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Sivaganga tahsildar suspend by district collector