சரக்கடிக்க பணம் கேட்ட மகன்.. மறுப்பு தெரிவித்த தாய்.. துள்ளத்துடிக்க அரங்கேறிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


மானாமதுரையில் மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சார்ந்தவர் ஜெயச்சந்திரன். 

இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த நிலையில், தனது தாயிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். 

தாய் தொடர்ந்து மது அருந்துவதற்கு பணம் தர மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக நேற்று இரவு இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியதில் மதுபோதையில் இருந்த கொடூரன் தனது தாயை கம்பு மற்றும் கல்லால் அடித்து கொலை செய்துள்ளான். 

சம்பவ இடத்திலேயே ஜெய்சந்திரனின் தாய் பரிதாபமாக பலியாகி நிலையில், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெயசந்திரனை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga mother murder by son after drinking liquor alcohol


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->