தாய், 2 மகள்கள் மர்ம மரணம்.. சிவகங்கையில் பெரும் சோகம்..!!
Sivaganga Mother Daughters Mystery Death Police Investigation 19 May 2021
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அழகாபுரி நகர் பகுதியை சார்ந்தவர் செல்வி சோபனா. இவர் கணவரை இழந்து வசித்து வருமாம் நிலையில், தனது 24 வயது மகள் அபிராமி மற்றும் 20 வயது மகள் ஷிவானியுடன் வசித்து வந்துள்ளார்.
மூத்த மகள் அபிராமி பி.எஸ்.சி ஐ.டி பயின்று துறையில் பயின்றுள்ள நிலையில், இளைய மகள் ஷிவானி மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ பயின்று வந்துள்ளார். தற்போது, கொரோனா ஊரடங்கால் ஷிவானியும் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், தாய், 2 மகள்கள் ஆகிய 3 பேரும் அக்கம் பக்கத்தில் உள்ள யாரிடமும் பேசுவதோ, பழகுவது கிடையாது. மூத்த மகள் அபிராமி கடந்த சில வருடத்திற்கு முன்னதாக மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சொப்னாவின் தங்கை தனது அக்காவின் வீட்டிற்கு எதிரிலேயே குடியிருந்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை சொப்னாவின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார்.
இதன்போது, ஷோபனா, ஷிவானி ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அபிராமி தலையில் அடிபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷோபனாவின் தங்கை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தேவகோட்டை காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அபிராமி கொலை செய்யப்பட்டாரா?., இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது மூவரும் கொலை செய்யப்பட்டு இறந்தார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Sivaganga Mother Daughters Mystery Death Police Investigation 19 May 2021