திருமணம் முடிந்த மறுநாள்.. கணவரை சாமர்த்தியமாக வெளியே அனுப்பிவிட்டு, இளம்பெண் விபரீதம்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அழகாபுரி நகரை சார்ந்தவர் செல்வகுமார் (வயது 27). இவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியை சார்ந்த சீனிவாசனின் மகள் சுவேதா (வயது 20). செல்வகுமாருக்கும், சுவேதாவிற்கும் திருமணம் நடத்தி முடிக்க நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதிகள் புதிதாக கட்டப்பட்டு இருந்த இல்லத்தில் குடியேறினர். சுவேதா தனது கணவரிடம், அருகில் இருக்கும் பழைய இல்லத்தில் விட்டுவந்த தனது அலைபேசியை எடுத்து வருமாறு கூறியுள்ளார். செல்வகுமாரும் மனைவியின் அலைபேசியை எடுக்க புறப்பட்டுள்ளார். 

கணவர் வீட்டினை விட்டு வெளியே சென்றதும், கதவை கோபத்தில் இருப்பது போல தடாலடியாக அடைத்த நிலையில், அதிர்ச்சியடைந்த செல்வகுமார் கதவை திறக்கும்படி கூறியுள்ளார். ஆனால், சுவேதா கதவை திறக்கவில்லை என்பதால், செல்வகுமார் அலறியுள்ளார். 

இதன்பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இவரை மீட்டு அங்குள்ள மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

மருத்துவமனையில் சுவேதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Manamadurai new married girl suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->