கணவனுக்கு துரோகம் செய்த வேதனையில் பெண் தற்கொலை.. கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி பழி தீர்த்த கணவர், மைத்துனர்கள்.! - Seithipunal
Seithipunal


மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ளக்காதலனை கணவர் தனது மைத்துனர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செஞ்சை பகுதியை சார்ந்தவர் மகாலிங்கம் (வயது 45). இவர் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காரைக்குடி அருகேயுள்ள தேனாற்றுப்பாலம் அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இது தொடர்பான தகவலை அறிந்த காரைக்குடி தெற்கு காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் காரைக்குடி பேருந்து நிறுத்தத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வங்கியில் 2 பேர் நின்று கொண்டு இருப்பதை கவனித்துள்ளனர். 

அவர்களை அழைத்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளனர். இதனையடுத்து, இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மகாலிங்கம் கொலையில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானது. இதனையடுத்து, இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை செய்கையில், தங்களின் தங்கை தற்கொலைக்கு மகாலிங்கம் காரணமாக இருந்ததால் அவரை கொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர்.  கொலையான மகாலிங்கத்திற்கும், தேவகோட்டையை சார்ந்த இராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடமாக கள்ளத்தொடர்பு பழக்கம் இருந்து வந்துள்ளது. ராதாவின் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், மணிகண்டனுக்கு ராதா - மகாலிங்கம் இடையே ஏற்பட்ட பழக்கம் தெரியவந்துள்ளது. இதனால் கணவர் மணிகண்டன் மனைவி ராதாவை கண்டித்துள்ளார்.

தனது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அறிந்த ராதா மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்த நிலையில், வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தாயின் தற்கொலையால் அவரது 2 குழந்தைகளும் கவனிக்க ஆளில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். இந்த விஷயம் மணிகண்டனுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து, ராதாவின் சகோதரர்கள் சுந்தரபாண்டி மற்றும் கார்த்திக் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு, மனைவியின் தற்கொலைக்கு காரணமான மகாலிங்கத்தை வாழவிடக்கூடாது என திட்டமிட்டு கொலைக்கான சமயம் பார்த்து காத்திருந்துள்ளனர். கடந்த சில மாதமாகவே மகாலிங்கம் எங்கு செல்கிறார்? என்பதை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

நேற்று மகாலிங்கம் தனியாக தனது இருசக்கர வாகனத்தில் செல்வதை கண்ட மணிகண்டன், தனது மைத்துனர்கள் 2 பேருடன் ஆம்னி வேனில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். காரைக்குடி தேனாற்று பாலம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாததையடுத்து, மகாலிங்கத்தை இடைமறித்து இருக்கின்றனர். 

இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த மகாலிங்கம் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சிக்கவே, வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, மணிகண்டன், சுந்தர பாண்டி மற்றும் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து மகாலிங்கத்தை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளனர்.  காவல் துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் சுந்தரபாண்டி மற்றும் கார்த்திக் சிக்கிக்கொண்ட நிலையில், மணிகண்டனை தேடி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாராட்டுகளை தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Man Murder due to Revenge of Culprit his Sister Suicide Case Husband and Woman Brothers Revenge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->