அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 10 பாம்புகள்.. அதிர்ச்சியில் மக்கள்.!!
Sivaganga govt hospital 10 snakes discovers near corona ward
தமிழகத்தில் கொரோனா வைரஸானது அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது.
இந்த விஷயம் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவமனையில் கொரோனா உறுதியாகி அனுமதியாகியுள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் சிவகங்கை மருத்துவக்கல்லூரி பழைய தலைமை மருத்துவமனை வளாக கொரோன வார்டு சுத்தம் செய்யும் பணியானது நடைபெற்று வந்தது. தற்போது அங்கு விஷ பாம்புகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஷ பாம்புகளை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவ குழுவினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் கொரோனா வார்டு அருகே 10 க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை பிடித்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Sivaganga govt hospital 10 snakes discovers near corona ward