ஆடுகளை நாய் கடித்ததால் தகராறு.. தாய்மாமா, அவரது மகனை கொடூர கொலை செய்த பயங்கரம்.!
Sivaganga Father and Son Murder by Relation due to Family Problem 30 March 2021
நாய் ஆடுகளை கடித்த விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையில், தந்தை - மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலுப்பிள்ளைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கும், உடன் பிறந்த சகோதரி குடும்பத்திற்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கருப்பையா வளர்த்து வந்த ஆடுகளை, அவரது சகோதரி வீட்டில் வளர்ந்து வந்த நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா, அவரது சகோதரியின் சகோதரி வீட்டிற்கு சென்று சண்டையிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பையாவின் சகோதரி மகன்கள் தாமோதரன், திரிசங்கு, சுந்தர்ராஜ் ஆகியோர், மாலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதனை தேடிச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சமயத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, சகோதரியின் மகன்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கொலை தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வந்த நிலையில், இவர்கள் மூவரும் திருபுவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாகச் சென்று சரணடைந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Sivaganga Father and Son Murder by Relation due to Family Problem 30 March 2021