வீட்டு உரிமையாளரின் ஓயாத தொல்லை.. பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. அரங்கேறிய சோகம்.!!
Sivaganga Family suicide due to House owner torture
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகரில் அதபடக்கி கிராமத்தை சார்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார்த்திகேயன் என்பவரின் இல்லத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவரது கணவரான பாலமுருகன் வெளிநாட்டில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் எந்த விதமான முன் தகவலும் இன்றி வீட்டினை காலி செய்ய நெருக்கடி கொடுத்ததாக தெரியவருகிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலில் காளீஸ்வரி இருந்து வந்துள்ளார். மேலும், வீட்டை காலி செய்ய கூறி அவதூறான வார்த்தைகளையும் பேசியுள்ளான்.
இதனால் மனவிரக்தியின் உச்சத்திற்கு சென்ற பெண்மணி தனது குழந்தை அபிஷேக் (வயது 9) மற்றும் மங்கையர் திலகம் (வயது 12) ஆகியோருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து, தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விஷத்தை அருந்திய குழந்தைகள் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மூவரின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்னதாக காளீஸ்வரி தனது வீட்டின் சுவற்றில், தனது உயிரிழப்பிற்கு வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன் தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், வீட்டின் உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Sivaganga Family suicide due to House owner torture