கையில் வாளுடன் மிரட்டல்.. சட்டவிரோத மதுபான விற்பனையை போட்டுக்கொடுத்ததால் அரசியல்கட்சி பிரமுகர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத மதுபான விற்பனையை காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததால் இளைஞர் மீது திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி பகுதியை சார்ந்தவர் நரேந்திரன். இதே பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் செல்லப்பாண்டி. செல்லப்பாண்டி திமுக பிரமுகராக இருந்து வரும் நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக நரேந்திரன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி, கடந்த 9 ஆம் தேதி நரேந்திரனை இடைமறித்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்பின்னர் செல்லப்பாண்டி காவல்துறை விசாரணைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். 

படுகாயமடைந்த நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லத்திற்கு திரும்பிய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். இந்நிலையில், திமுக நிர்வாகி செல்லப்பாண்டி பட்டா கத்தியை சுழற்றி மிரட்டல் விடுப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வெளியாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ள காவல் துறையினர், செல்லப்பாண்டியை தேடி வருகின்றனர். மேலும், செல்லப்பாண்டிக்கும் - நரேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga DMK Supporter Video with Sword 20 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->