திருட்டு தங்கம் பாதி விலைக்கு.. கோடிக்கணக்கில் சுருட்டிய தம்பதி.. கதறும் வாடிக்கையாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதி விலைக்கு 24 கேரட் மதிப்புள்ள தங்க கட்டிகளை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணத்தை ஏமாற்றிச் சென்ற தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி மாணிக்கம் - கயல்விழி. இவர்கள் இருவரும் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் வசதியாக இருக்கும் நபர்களைத் தொடர்பு கொண்டு, தாங்கள் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 24 கேரட் மதிப்புள்ள தங்கத்தை வைதிருப்பதாக கூறியுள்ளனர். 

மேலும், இந்த தங்கத்தை பாதி விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளனர். இவர்களின் ஆடம்பர தோற்றம் மற்றும் வீடு ஆகியவற்றை பார்த்து ஏமாந்த பலரும், லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை கொடுத்துள்ளனர். 

இது மொத்தமாக ரூ.3 கோடி அளவிற்கு பணமும், 500 சவரன் அளவிற்கு நகையும் சேர்ந்து இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இந்த பணத்தையும், நகையையும் சுருட்டிக்கொண்டு தம்பதிகள் இருவரும் தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள் காரைக்குடி காவல் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga couple escaped with 3 crore money and 500 Carat gold Jewels


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->