கள்ளக்காதலனுடன் சேர்ந்து, 4 வயது மகனுக்கு தாய் செய்த பெருங்கொடூரம்.. அரங்கேறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியை சார்ந்தவர் சிவானந்தம். இவர் இராணுவ வீரராக இருந்து வருகிறார். இவரது மனைவி வனிதா (வயது 29). இவர்களின் மகன் நந்தீஸ் குமார் (வயது 4). வணிதாவிற்கும் - இதே ஊரை சார்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக் ராஜா என்ற சிவகார்த்திக்கும் (வயது 28) இடையே கள்ளத்தொடர்பு பழக்கம் இருந்துள்ளது. 

இதனையடுத்து, இவர்கள் இருவரும் நந்தீஷ்குமாருடன் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு நந்தீஷ்குமார் இடையூறாக இருப்பதாக கருதிய கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி சிறுவனை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். 

கடந்த 2015 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நந்தீஷ்குமாரை இருவரும் தாக்கிய நிலையில், படுகாயமடைந்த சிறுவனை தூக்கிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனர். வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதால், கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகேயுள்ள மலையடிவாரத்தில் சிறுவனின் உடலை புதைத்துவிட்டு இருவரும் திருப்பதிக்கு சென்றுள்ளனர். 

இவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் படுகாயமடைந்த குழந்தை மாயமானதை அறிந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பதி காவல் துறையினர், கள்ளக்காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில், குழந்தையை தாக்கியதில் அவர் இறந்துவிட்டதும், உடலை கிருஷ்ணகிரியில் புதைத்து வைத்துள்ளதையும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இருவரையும் அழைத்து வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். 

இவர்களில் கார்த்திக்ராஜா தலைமறைவாகிவிட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக்கொலை செய்த வனிதாவுக்கு 17 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக உள்ள சிவகார்த்தியை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Affair woman Vanitha Murder his Child with Affair man Karthick Raja Court Judgement 1 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->