சொத்து பிரச்சனையால் சகோதரனை கொலை செய்த சகோதரி.. திருவள்ளூர் அருகே நிகழ்ந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


மனநலம் சரியில்லாத சகோதரனை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன். ஓவியரான இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் குன்றி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.  இவருக்கும் அவரது மூத்த சகோதரிக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சகோதரியின் கணவரை வெட்டியதால் பூபாலன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.  இதனை அடுத்து, பூபாலன் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகலவறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் தனலெட்சுமியின் குடும்பத்தினர் பூபாலனை தாக்கியது தெரியவந்தது. மேலும், படுகாயமடைந்த அவரை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர்.

காயமடைந்து உரிய சிகிச்சை, குடிநீர், உணவு ஏதும் கிடைக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, தனலெட்சுமி மற்றும் அவரது கணவரை கைது செய்த காவல்துறையினர்  அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sister Killed Her Brother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->