விடுமுறைக்காக காவிரி ஆற்றுக்கு குளிக்கச்சென்ற அக்கா, தம்பி!! அங்கு ஏற்பட்ட கொடூரம்!!
sister and brother died in cauvery river
திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் தரண் என்ற சிறுவனும் அவரது மகள் கிருத்திகா ஆகிய இருவரும் பள்ளி விடியுமுறையில், அவரது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் குடும்பத்தினர் 5 பேர் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளனர்.
முக்கொம்பு அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கி 5 பேரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச்சென்ற கிருத்திகா, தரண், தீபக் ஆகியோர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அதனை பார்த்த தரனின் சித்தி அலறல் சத்தம் போட்டுள்ளார்.
அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து தண்ணீரில் மூழ்கிய 3பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கிருத்திகா மற்றும் தீபக் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தரணுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சுற்றுலாவுக்கு சென்று பரிதாபமாக இரண்டு உயிர்கள் பலியானதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறந்துவிடப்பட்டு தேங்கியிருந்த தண்ணீருக்கு அருகே பாதுகாப்பு போடப்பட்டது.
English Summary
sister and brother died in cauvery river