கிணற்றில் குதித்த தங்கை, காப்பாற்ற குதித்த அண்ணன்.. நேர்ந்த துயரம்.!  - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த தங்கை மற்றும் காப்பாற்ற சென்ற அண்ணன் இருவரும்  நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

கோவை மதுக்கரை அருகே வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், மனமுடைந்த மகள் சித்ரா, ஆத்திரமடைந்து கிணற்றில் குதித்து இருக்கின்றார். 

உடனடியாக கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்ற அண்ணன் அருண்குமாரும் கிணற்றில் குதித்து இருக்கின்றார். நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் இவர்களின் உடல்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். 

அருண்குமாருக்கு திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகின்றது. தங்கை மற்றும் காப்பாற்ற சென்ற அண்ணன் இருவரும்  நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sister and brother death in kovai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->