பாட்டி மற்றும் பேரனுக்கு அரிவாள் வெட்டு.. கஞ்சா போதை ஆசாமி வெறிசெயல்..!
Sickle cut for grandmother and grandson
கஞ்சா போதையில் 5 வயது சிறுவன் மற்றும் அவரது பாட்டியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு நூல் சத்திரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது அடிக்கடி பக்கத்து வீட்டினர் உடன் தகராற்றில் ஈடுபடுவார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு வசித்து வரும் 70 வயது பாட்டி பூ கட்டிக்கொண்டிருந்தார்.
கஞ்சா போதையில் இருந்த யுவராஜ் மூதாட்டியை வீட்டினுள் இழுத்து சென்று சரமாரியாக வெட்டி உள்ளார். தனது பாட்டியின் சத்தம் கேட்டு வந்த 5 வயது சிறுவன் அரிவாளால் வெட்டி விட்டு கதவை தாழிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள யுவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Sickle cut for grandmother and grandson