காவல் அதிகாரி வில்சன் கொலை வழக்கில், அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்.. விசாரணையில் வெளியாகும் பகீர் குறிப்புகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த எட்டாம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக காவல்துறையினர் அடுத்தடுத்து பலரையும் கைது செய்து வருகின்றார். முதலில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகள் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 

இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்ற நிலையில், இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது தொடர்பாகவும் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் இவர்களுக்கு சிம்கார்டு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அங்கு இருக்கும் கடைகளில், போலி முகவரி மூலம் பயங்கரவாதிகளுக்கு ஏராளமான சிம் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அந்த கடையில் மூன்று உரிமையாளர்கள், கடையில் பணியாற்றும் ஊழியர்களின் விசாரணைக்கு சென்னை அழைத்து வரப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே சிம்கார்டு சப்ளை செய்திருந்த பெங்களூருவை சேர்ந்த மூன்று பேர் மற்றும் காஞ்சிபுரத்தைச் சார்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தைச் சார்ந்த அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பெங்களூர் புறநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மெகபூப் பாஷா (வயது 45) மற்றும் முகமது மன்சூர் கான் போன்ற பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த உசேன் செரீப் என்பவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து பெங்களூர் காவல்துறையினருக்கு உடனடியாக தகவலை தெரியப்படுத்தி உசேனை கைது செய்தனர். விசாரணைக்காக உசேன் சென்னை அழைத்து வரப்பட்டு, சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக காவல்துறையினர் மேலும் 10 பயங்கரவாதிகளை கைது செய்ய உள்ளனர் என்றும், இந்த கும்பலுக்கு டெல்லியை சேர்ந்த காஜாமைதீன் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்தாலும், நடத்தப்பட்ட விசாரணையில் இன்னொரு தலைவர் இருப்பதாகவும், அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும், இவர்களுக்குள் இருக்கும் தகவல் பரிமாற்றம் ஆனது சாப்ட்வேர் மூலமாக பரிமாறப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பிறர் வற்புறுத்தி கண்டறியும் நேரத்தில் அதுவே தானாகவே அழிந்துவிடும் தன்மையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SI wilson murder terrorist arrested Continuously


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->