மச்சினிச்சியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..! - Seithipunal
Seithipunal


மனைவியின் தங்கையை கடத்திய காவல்துறை உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், ஆப்பகூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.  காவல் உதவியாளரான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக கூறப்படுகிறது. மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என கூறி அவரது மனைவி மற்றும் மச்சினிச்சியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, மதுரைக்கு முன்புள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், சத்யாவை கீழே இறக்கி விட்டார். அதன்பின், மச்சினிச்சியை கடத்தி சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி  காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியிலேயே மடக்கி பிடித்தனர்.

காவல்துறையினர் விசாரணையில், அவர் மச்சினிச்சியை கடத்தி சென்றது தெரியவந்தது.  இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த அவர் பணியில் சேர்ந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SI Suspended In Nilagiris


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->