கடைக்கு வரும் சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுத்து தகாத காரியம் செய்த கடைக்காரர்..!
shopkeeper abuse children
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரைப்பேட்டை சேர்ந்த ராமதாஸ் என்பவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த ராமதாஸ் அவர் கடைக்கு பொருள் வாங்க வரும் சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுத்து, அவர்களிடம் விளையாடுவது போல் உடலில் அங்கு இங்கு கை வைத்து பாலியல் சீண்டல் செய்வதாக தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கம்போல் அவரது கடைக்கு வந்த 4 வயது குழந்தை ஒருவருக்கு அந்த 60 வயது கிழவன் மிட்டாய் கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறான். அதன் பின்னர், ராமதாஸ் நடந்தது குறித்து அந்த குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்கள்.
பின்னர், அளிக்கப்பட்ட புகாரை கொண்டு, மகளிர் போலீசார் ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது போன்று, மனித உருவத்தில் பல மிருகங்கள் வேட்டைக்காக காத்திருக்கிறது, எனவே, தனது குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் பெற்றோர்கள், இவ்வாறு தவறாக நடந்து கொண்டால் உடனே பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை கற்று தர வேண்டும்.
பெற்றோர்களிடம் சொன்னால் அடிப்பார்கள் என்ற பயத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் அமைதியாக எடுத்து கூறி தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களும் இது போன்று தவறு நடந்தால் உடனே பெற்றோர்களிடம் தெரிவிக்க முற்படுவார்கள்.
English Summary
shopkeeper abuse children