மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை... தலைமை காவலர் கைது..!
Sexual harassment of a mentally ill woman
மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தலைமை காவலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கருணாநிதி. இவர் அவரது வீட்டிற்கு அருகில் நின்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தனியே அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார். அந்த பெண் சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அதனால், கருணாநிதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கருணாநிதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sexual harassment of a mentally ill woman